ஈரோட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வாலிபர் வீதியில் உலா- பொதுமக்கள் பீதி
ஈரோடு:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஈரோட்டுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை கண்டறிந்து சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி வருகின்றனர்.
வீடுகள் நெருக்கமாக இல்லாத பகுதிகளில் உள்ளவர்களை வீடுகளிலே தனிமைப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு சடையம்பாளையம் பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்க தக்க வாலிபர் சென்னையில் பணியாற்றி கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஈரோடு திரும்பினார்.
இதனை அறிந்த சுகாதாரத் துறையினர் அந்த வாலிபரை வீட்டிலே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள உத்தரவிட்டனர். மேலும் அவரது வீட்டிற்கு முன்பாக தனிமைப்படுத்தப்பட்ட வீடு என நோட்டீசும் ஒட்டினர்.
ஆனால் அந்த வாலிபர் தன்னை தனிமைப்படுத்தி கொள்ளாமல் வீதிகளில் உலா வருவதாக அப்பகுதி மக்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார், சுகாதாரத்துறையினர் நேரில் என்று அந்த வாலிபரை எச்சரித்தனர். ஆனாலும் அந்த வாலிபர் தொடர்ந்து வீதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.