செய்திகள்
பச்சை மண்டலத்திற்கு மாறும் ஈரோடு மாவட்டம்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக புதிதாக கொரோனா தொற்று இல்லை என்பதால் பசுமை மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக புதிதாக கொரோனா தொற்று இல்லை.
ஏப்ரல் 14-ந்தேதிக்கு பின்னர் யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை. எனவே ஆரஞ்சு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. நாளையில் இருந்து ஈரோடு பச்சை மண்டலத்திற்கு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறியதாவது:-
இன்று ( செவ்வாய்க்கிழமை) கடந்து விட்டால் ஈரோடு பசுமை மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அறிவிக்க உள்ளது. தற்போது அத்தியாவசிய தேவைக்கான கடைகள் மற்றும் போக்குவரத்து அரசு உத்தரவின் அடிப்படையில் இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக புதிதாக கொரோனா தொற்று இல்லை.
ஏப்ரல் 14-ந்தேதிக்கு பின்னர் யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை. எனவே ஆரஞ்சு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. நாளையில் இருந்து ஈரோடு பச்சை மண்டலத்திற்கு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறியதாவது:-
இன்று ( செவ்வாய்க்கிழமை) கடந்து விட்டால் ஈரோடு பசுமை மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அறிவிக்க உள்ளது. தற்போது அத்தியாவசிய தேவைக்கான கடைகள் மற்றும் போக்குவரத்து அரசு உத்தரவின் அடிப்படையில் இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.