செய்திகள்
கொலை

காரைக்குடியில் மனைவியை எரித்து கொன்ற கணவன்

Published On 2020-05-03 14:36 IST   |   Update On 2020-05-03 14:36:00 IST
காரைக்குடி அருகே குடும்பத்தகராறில் மனைவியை கணவன் எரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி:

காரைக்குடி குறிஞ்சி கண்மாய பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 40). காரைக்குடியில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுகந்தி (வயது 35) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

காதல் திருமணம் செய்த இவர்களிடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது.

வழக்கம்போல் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் செந்தில் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து சுகந்தி மீது ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது. உடல் கருகிய சுகந்தியை காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகந்தி பரிதாபமாக இறந்தார்.

குற்றுயிராய் கிடந்த சுகந்தி போலீசாரிடம் தெரிவித்த வாக்குமூலத்தில் கணவரே தன் உடல் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து செந்திலிடம் விசாரணை நடைபெறுகிறது.

Similar News