செய்திகள்
சீல் வைக்கப்பட்ட குடோனை உடைத்து மதுபான பாட்டில்கள் கொள்ளை - ஒருவர் சிக்கினார்
புதுவையில் சீல் வைக்கப்பட்ட குடோனை உடைத்து மதுபான பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்த சம்பவத்தில் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் மதுபான தொழிற்சாலை, மதுபார்கள், மொத்த, சில்லரை விற்பனை நிலையங்கள், குடோவுன்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. மதுபான பிரியர்கள் மது கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஊரடங் கிற்கு முன்பாகவே சிலர் பதுக்கி வைத்திருந்த மதுபானங்களை 4 மடங்கு அதிகவிலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் மதுபான குற்றங்கள் புதுவையில் அதிகரித்துள்ளது. மது கடத்தல், கூடுதல் விலைக்கு விற்பது, மதுபான கடைகளை உடைத்து திருடுவது என குற்றங்கள் தொடர்ந்து வருகின்றன. புதுவை மறைமலை அடிகள் சாலையில் தனியாருக்கு சொந்தமான பெரிய மதுபான குடோவுன் உள்ளது. இந்த மதுபான குடோவுனை சிலர் உடைத்து பெட்டி, பெட்டியாக மதுபானங்களை கொள்ளையடித்துள்ளனர். நள்ளிரவில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்து குடோவுன் உரிமையாளர் ராமமூர்த்திக்கு தெரிய வந்தவுடன் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் மோப்பநாய் சகிதமாக வந்து தீவிர சோதனை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்தனர். அப்போது கிடங்கின் அருகில் உள்ள மரத்தடியில் ஆறு பெட்டிகளில் மது பானங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கிடங்கிலிருந்து எவ்வளவு மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்டன? என்ற விபரங்களை தீவிரமாக சேகரித்து வருகின்றனர். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுவால் அல்வால், போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தலைமையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை போலீசார் சோதனையிட்டனர். அப்போது 2 பேர் குடோவுனை உடைத்து மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் செல்வது தெரியவந்தது.
அந்த வீடியோவை முழுமையாக ஆய்வு செய்த போது அப்பகுதியை சேர்ந்த 2 மெக்கானிக்குகள் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தனர். இதில் ஒருவர் போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளார். மற்றொருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிடிபட்டவரிடம் எவ்வளது மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்டது? எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் மதுபான தொழிற்சாலை, மதுபார்கள், மொத்த, சில்லரை விற்பனை நிலையங்கள், குடோவுன்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. மதுபான பிரியர்கள் மது கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஊரடங் கிற்கு முன்பாகவே சிலர் பதுக்கி வைத்திருந்த மதுபானங்களை 4 மடங்கு அதிகவிலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் மதுபான குற்றங்கள் புதுவையில் அதிகரித்துள்ளது. மது கடத்தல், கூடுதல் விலைக்கு விற்பது, மதுபான கடைகளை உடைத்து திருடுவது என குற்றங்கள் தொடர்ந்து வருகின்றன. புதுவை மறைமலை அடிகள் சாலையில் தனியாருக்கு சொந்தமான பெரிய மதுபான குடோவுன் உள்ளது. இந்த மதுபான குடோவுனை சிலர் உடைத்து பெட்டி, பெட்டியாக மதுபானங்களை கொள்ளையடித்துள்ளனர். நள்ளிரவில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்து குடோவுன் உரிமையாளர் ராமமூர்த்திக்கு தெரிய வந்தவுடன் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் மோப்பநாய் சகிதமாக வந்து தீவிர சோதனை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்தனர். அப்போது கிடங்கின் அருகில் உள்ள மரத்தடியில் ஆறு பெட்டிகளில் மது பானங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கிடங்கிலிருந்து எவ்வளவு மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்டன? என்ற விபரங்களை தீவிரமாக சேகரித்து வருகின்றனர். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுவால் அல்வால், போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தலைமையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை போலீசார் சோதனையிட்டனர். அப்போது 2 பேர் குடோவுனை உடைத்து மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் செல்வது தெரியவந்தது.
அந்த வீடியோவை முழுமையாக ஆய்வு செய்த போது அப்பகுதியை சேர்ந்த 2 மெக்கானிக்குகள் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தனர். இதில் ஒருவர் போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளார். மற்றொருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிடிபட்டவரிடம் எவ்வளது மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்டது? எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.