செய்திகள்
தற்கொலை

தவளக்குப்பம் அருகே எலிமருந்து தின்று பெண் தற்கொலை

Published On 2020-04-18 08:55 GMT   |   Update On 2020-04-18 08:55 GMT
தவளக்குப்பம் அருகே நோய் கொடுமை காரணமாக எலிமருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகூர்: 

தவளக்குப்பம் அருகே நல்லவாடு புதுக்குப்பத்தை சேர்ந்தவர் பக்கிரி. இவரது மகள் உதயா (வயது33). இவருக்கும் வீராம்பட்டினத்தை சேர்ந்த அரி என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

தற்போது அரி வெளிநாட்டில் கப்பலில் வேலை செய்து வருகிறார். இதற்கிடையே உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறி உதயா கடந்த 15-ந் தேதி பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். மறுநாள் 16-ந் தேதி நோய் கொடுமையால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து எலி மருந்து தின்று விட்டதாக உதயா தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக உதயாவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து உடல்நிலை பாதிப்பால் எலிமருந்து தின்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News