செய்திகள்
தாக்குதல்

தவளக்குப்பம் அருகே பெண் மீது தாக்குதல்- மீனவருக்கு வலைவீச்சு

Published On 2020-04-17 14:11 IST   |   Update On 2020-04-17 14:11:00 IST
தவளக்குப்பம் அருகே பெண் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகூர்:

தவளக்குப்பம் அருகே நல்லவாடு கிராமம் தெற்கு வீதியை சேர்ந்தவர் சர்மிளா (வயது33). இவர் சம்பவத்தன்று பக்கத்து வீட்டை சேர்ந்த மீனவர் வேலுமணி என்பவர் மனைவியிடம் தனக்கு சுனாமி வீடு கிடைக்க உனது கணவர் தடையாக உள்ளார் என்று கூறி வருத்தப்பட்டார்.

இதையடுத்து வேலுமணியிடம் அவரது மனைவி இதுபற்றி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வேலுமணி தகாத வார்த்தைகளால் திட்டி சர்மிளாவை தாக்கி கீழே தள்ளினார். அப்போது அருகில் உள்ள இரும்பு கேட்டில் தலை மோதி சர்மிளா படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சர்மிளா இதுபற்றி தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வேலுமணியை தேடி வருகிறார்கள்.

Similar News