செய்திகள்
புதுச்சேரி சட்டசபை

புதுச்சேரியில் 2 பேருக்கு கொரோனா- ஊருக்கு சீல் வைப்பு

Published On 2020-04-01 03:39 GMT   |   Update On 2020-04-01 03:39 GMT
புதுச்சேரியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் வசித்து வந்த ஊருக்கு சீல் வைக்கப்பட்டு போக்குவரத்து தடைசெய்யப்பட்டள்ளது.
புதுச்சேரி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவரும் கண்காணிக்கப்படுகின்றனர். அவ்வகையில் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்று திரும்பிய புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் வசித்து வந்த அரியாங்குப்பம் சொர்ணா நகர் பகுதி சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. 

புதுச்சேரியில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த பெண் வீடு திரும்பிய நிலையில், புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டிருக்கிறது.
Tags:    

Similar News