செய்திகள்
மாயம்

ரெட்டியார்பாளையத்தில் மகளுடன் தாய் மாயம்

Published On 2020-03-31 09:14 GMT   |   Update On 2020-03-31 09:14 GMT
புதுவை ரெட்டியார்பாளையத்தில் மகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற தாய் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

ரெட்டியார்பாளையம் அஜீஸ் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜான்சிராணி. இவரது மகள் செண்பகவள்ளி (வயது 33).

இவர் தனது கணவரை பிரிந்து கடந்த 3 வருடங்களாக தனது மகள் பவானி (8) உடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். பவானி அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.

ஜான்சிராணி அந்த பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக செண்பகவள்ளி இருந்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தனது மகள் பவானியுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற செண்பகவள்ளி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் எங்கேயும் செண்பவள்ளியும் அவரது மகளையும் காணவில்லை.

இதுகுறித்து ஜான்சிராணி ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான, செண்பகவள்ளி மற்றும் அவரது மகள் பவானி ஆகியோரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News