செய்திகள்
புதுவை சட்டசபை

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு புதுவை சட்டசபையில் அஞ்சலி

Published On 2020-03-30 13:58 GMT   |   Update On 2020-03-30 13:58 GMT
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு புதுவை சட்டசபையில் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
புதுச்சேரி:

புதுவை சட்டசபை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் முதல் அலுவலாக சபாநாயகர் சிவகொழுந்து இரங்கல் குறிப்பு வாசித்தார்.

மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்,  மற்றும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் பற்றிய குறிப்புகளை சபாநாயகர் சிவகொழுந்து வாசித்தார். இதனைத்தொடர்ந்து சபை உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக்கொண்டார்.  உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் சபை நிகழ்வுகள் தொடர்ந்தது.
Tags:    

Similar News