வில்லியனூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து பலி
வில்லியனூர், மார்ச். 30-
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் துளசிதாஸ் (வயது 39). இவர் வில்லியனூர் அருகே உளவாய்க்காலில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அங்குள்ள குடியிருப்பில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.
தற்போது கொரோனா வைரஸ் பரவுதல் காரண மாக தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் நேற்று மதியம் உணவு தயாரித்து நண்பர்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென துளசிதாஸ் மயங்கி விழுந் தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக துளசிதாசை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே துளசிதாஸ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
திடீர் மாரடைப்பால் துளசிதாஸ் மயங்கி விழுந்து இறந்து போனதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு உசேன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயங்கி விழுந்து இறந்துபோன துளசிதாசுக்கு ஹீராதேவி என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.