முதலியார்பேட்டையில் பழக்கடை உரிமையாளர் மீது தாக்குதல்
புதுச்சேரி:
புதுவை உப்பளம் நேதாஜி நகர் அவ்வை அறப்பணி தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 32). இவர் பழக்கடை நடத்தி வருகிறார்.
இவர் நேற்று இரவு முதலியார் பேட்டை பகுதியில் பழக்கடை வைத்திருக்கும் ராமமூர்த்தி என்பவரிடம் பழங்கள் வாங்கி உள்ளார். அந்த பழங்கள் அழுகி போயிருந்ததால் அதற்கு மாற்றாக வேறு பழங்கள் தறுமாறு செந்தில்குமார் கேட்டுள்ளார். இதற்கு ராமமூர்த்தி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும் தாக்கியும் உள்ளார். இதனை செந்தில்குமார் தடுக்க முயன்ற போது ராமமூர்த்தி அவரது கையை பிடித்து கடித்து உள்ளார். இதில் காயமைந்த செந்தில்குமார் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து செந்தில்குமார் முதலியார் பேட்டை போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.