செய்திகள்
வீட்டில் டி.வி.யில் அதிக சத்தம் வைத்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்த கல்லூரி மாணவி
உப்பளம் நேதாஜி நகரில் நோய் கொடுமை அதிகமானதால் வீட்டில் டி.வி.யில் அதிக சத்தம் வைத்து விட்டு கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
உப்பளம் நேதாஜி நகர் ரங்கநாதன் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியநாதன். பெயிண்டர். இவரது மகள் சோபியா மேரி. (வயது 20). இவர் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். சோபியா மேரிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று அவருக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சோபியா மேரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
வீட்டில் பெற்றோர் இருந்த நிலையில் டி.வி.யில் அதிக சத்தம் வைத்து விட்டு வீட்டின் அறையை உட்புறமாக பூட்டிக் கொண்ட சோபியா மேரி மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார்.
வெகுநேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் கதவை உடைத்து பார்த்தனர்.
அப்போது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து சோபியா மேரியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சோபியாமேரி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உப்பளம் நேதாஜி நகர் ரங்கநாதன் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியநாதன். பெயிண்டர். இவரது மகள் சோபியா மேரி. (வயது 20). இவர் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். சோபியா மேரிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று அவருக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சோபியா மேரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
வீட்டில் பெற்றோர் இருந்த நிலையில் டி.வி.யில் அதிக சத்தம் வைத்து விட்டு வீட்டின் அறையை உட்புறமாக பூட்டிக் கொண்ட சோபியா மேரி மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார்.
வெகுநேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் கதவை உடைத்து பார்த்தனர்.
அப்போது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து சோபியா மேரியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சோபியாமேரி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.