செய்திகள்
கடத்தல்

பாகூரில் வீட்டில் தூங்கிய சிறுமி கடத்தல்- தாய் போலீசில் புகார்

Published On 2020-03-20 18:05 IST   |   Update On 2020-03-20 18:05:00 IST
பாகூரில் வீட்டில் தூங்கிய சிறுமி கடத்தப்பட்டதாக தாய் போலீசில் புகார் கூறியுள்ளார்.

பாகூர்:

பாகூர் மேற்கு கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் தேவநாதன். இவரது மனைவி மலர்கொடி. இவர்களுக்கு மஞ்சுமாதா (வயது18) மற்றும் வினிதா (16) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேவநாதன் இறந்து விட்டார். இதையடுத்து மலர்கொடி தனது மகள்களுடன் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு மலர்கொடி தனது மகள்களுடன் வீட்டில் தூங்கினார். மறுநாள் காலையில் பார்த்த போது வினிதாவை காணாமல் மலர்கொடி திடுக்கிட்டார். உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் வினிதா இல்லை.

இதையடுத்து மலர்கொடி தனது மகள் மாயமானது குறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் வினிதாவை யாரோ கடத்தி கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறியுள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News