செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் எதிரொலி- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை

Published On 2020-03-17 09:44 GMT   |   Update On 2020-03-17 09:44 GMT
கொரோனா வைரசை தடுக்கும் பொருட்டு முதல்-அமைச்சர், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரின் உத்தரவின்படி அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு 31-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
சிதம்பரம்:

சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி மத்திய சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் கொரோனாவை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரசை தடுக்கும் பொருட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க முதல்-அமைச்சர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதனை தொடர்ந்து பள்ளி- கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன.

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு உள்ளூர் மற்றும் வெளிமாநில மாணவ- மாணவிகள் விடுதிகளில் தங்கி படித்து வருகிறார்கள். முதல்-அமைச்சர், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரின் உத்தரவின்படி அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு 31-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகள் உடனே வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் பல்கலைக்கழக பணியாளர்கள், பேராசிரியர்கள் அனைவரும் பணிக்கு வரவேண்டும் என்று தெரிவிக்கபட்டு உள்ளது.

இந்த தகவலை பல்கலைகழக பதிவாளர் கிருஷ்ணமோகன் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News