செய்திகள்
மணல் கடத்தல்

நெட்டப்பாக்கம் அருகே மலட்டாற்றில் மணல் கடத்திய ஜே.சி.பி., டிப்பர் லாரி பறிமுதல்

Published On 2020-03-13 09:29 GMT   |   Update On 2020-03-13 09:29 GMT
நெட்டப்பாக்கம் அருகே மலட்டாற்றில் மணல் கடத்திய ஜே.சி.பி. மற்றும் டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று இரவு நெட்டப்பாக்கம் அருகே ஏரிக்கரை காலனி பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது ரெங்கா ரெட்டிப்பாளையம் மலட்டாற்றில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஜே.சி.பி. எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு இருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து ஜே.சி.பி. எந்திரம் மற்றும் டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து மணல் கடத்த முயன்றவர்கள் யார் என்பது குறித்தும், ஜே.சி.பி. எந்திரம் மற்றும் டிப்பர் லாரி யாருக்கு சொந்தமானது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News