செய்திகள்
திருக்கழுகுன்றத்தில் சாராயம் விற்ற 2 பேர் கைது
திருக்கழுகுன்றத்தில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகர் பாண்டூர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பதாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது ராஜி, குப்பன் ஆகியோர் சாராயம் விற்பது தெரிந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 200 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.