செய்திகள்

ஈரோட்டில் போலீஸ்காரர் வீட்டில் 20 பவுன் நகை, பணம் கொள்ளை

Published On 2019-04-05 15:24 IST   |   Update On 2019-04-05 15:24:00 IST
ஈரோட்டில் போலீஸ்காரர் வீட்டில் 20 பவுன் நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு முத்தம் பாளையம் ஹவுசிங் யூனிட் பேஸ் 3 பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 35). இவரது மனைவி சித்ரா என்கிற மைதிலி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

பார்த்திபன் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார்.அவர்கள் ஈரோட்டுக்கு சென்றனர். பின்னர் 2 மணி நேரம் கழித்து 12.30 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

அப்போது வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு பார்த்திபன் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணரும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தார்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நேற்று இரவு வீட்டை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு மெயின் கேட் வழியாக உள்ளே குதித்து வீட்டின் பூட்டை கடப்பாரை, கம்பியால் நெம்பி உடைத்து உள்ளே சென்று கைவரிசையை காட்டியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

கொள்ளை நடந்த வீட்டை சுற்றிலும் காலியிடங்கள், இருந்ததால் கொள்ளையர்களுக்கு அது வசதியாக போய்விட்டது.

இந்த துணிகர கொள்ளை குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News