செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2019-02-11 18:22 GMT   |   Update On 2019-02-11 18:22 GMT
மணமேல்குடி காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
மணமேல்குடி:

மணமேல்குடி காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மணமேல்குடி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கடை வீதி வழியாக மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் முடி வடைந்தது.

ஊர்வலத்தில் மது அருந்தி வாகனம் ஓட்ட கூடாது. செல்போன் பேசிகொண்டு வாகனம் ஓட்டக் கூடாது. ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்பன உள்பட விழிப்புணர்வு வாசகங்கள்அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News