செய்திகள்

சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு

Published On 2019-01-09 11:31 GMT   |   Update On 2019-01-09 11:31 GMT
3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி இன்று மேல்முறையீடு செய்தார். #ChennaiSpecialCourt #MinisterBalakrishnaReddy
சென்னை:

பொது சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னையில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதுள்ள வழக்குகளை விசாரித்து வரும் தனிகோர்ட்டு நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.

இதைத்தொடர்ந்து பாலகிருஷ்ணாரெட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.


மேலும் அவரது சார்பில் வக்கீல் டி.செல்வம் ஆஜராகி இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தண்டனையை நிறுத்தி வைத்தார்.

இந்நிலையில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணாரெட்டி இன்று மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் வர உள்ளது. #ChennaiSpecialCourt #MinisterBalakrishnaReddy 
Tags:    

Similar News