செய்திகள்

ராசிபுரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- ரூ.6 ஆயிரம் அபராதம்

Published On 2018-11-23 13:24 GMT   |   Update On 2018-11-23 13:24 GMT
ராசிபுரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ததாக 15 கடைக்காரர்களுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ராசிபுரம்:

ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட சின்ன கடைவீதி, பெரிய கடைவீதி, பூக்கடை வீதிகளில் உள்ள மளிகை கடை, ஜவுளிக்கடை, பூக்கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யப்படுகிறதா? பயன்படுத்தப்படுகிறதா? என்பதை நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் நகராட்சி துப்பரவு அலுவலர் பாலகுமார்ராஜூ துப்பரவு ஆய்வாளர்கள் பாஸ்கரன், சையத்காதர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் சோதனையிட்டனர்.

அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக் உள்பட 250 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ஆய்வின் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது கடைக்காரர்களை அறிவுறுத்தினர்.

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ததாக 15 கடைக்காரர்களுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர். சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் அபராத தொகையை உடனடியாக கட்டிவிட்டனர். #tamilnews
Tags:    

Similar News