செய்திகள்

திலாஸ்பேட்டையில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்

Published On 2018-10-14 16:33 GMT   |   Update On 2018-10-14 16:33 GMT
திலாஸ்பேட்டையில் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி மாயமானார்.

புதுச்சேரி:

புதுவை திலாஸ்பேட்டை சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் அதே பகுதியில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மகள் ஆர்த்தி (வயது19). இவர் பாக்குமுடையான்பட்டில் உள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று ஆர்த்தி கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிச்சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் ஆர்த்தி வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கல்லூரிக்கு சென்று விசாரித்தனர். அப்போது ஆர்த்தி கல்லூரிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து உறவினர் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் ஆர்த்தி இல்லை.

இதைத்தொடர்ந்து ஏழுமலை தனது மகள் மாயமானது குறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News