செய்திகள்

கீழக்கரையில் சொத்துவரி மதிப்பு குறித்த விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணி தீவிரம்

Published On 2018-10-09 11:27 GMT   |   Update On 2018-10-09 11:27 GMT
கீழக்கரையில் நகராட்சி அலுவலர்கள் நேரடியாக சென்று சொத்து வரி சுய மதிப்பீட்டுபடிவத்தை வீடுகள், கடைகள் வைத்திருக்கும் அனைவருக்கும் வழங்கி வருகின்றனர்.
கீழக்கரை:

கீழக்கரை நகரில் உள்ள காலியிடம், வீடுகள், மற்றும் கடைகளுக்கு விதிக்கும் சொத்துவரி மதிப்பை மறுபரிசீலனை செய்யும் பணியை கீழக்கரை நகராட்சி அலுவலர்கள் தொடங்கி உள்ளனர்.

இதற்காக வீடுகள் தோறும் நகராட்சி அலுவலர்கள் நேரடியாக சென்று சொத்து வரி சுய மதிப்பீட்டுபடிவத்தை வீடுகள், கடைகள் வைத்திருக்கும் அனைவருக்கும் வழங்கி வருகின்றனர். அதில் பெயர், முகவரி, வீட்டின் அளவு, கை பேசி எண், மின் இணைப்பு எண் போன்றவற்றை படிவத்தில் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

இவை அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வரிவிதிப்பு தொகையில் மாற்றம் செய்யப்படும். சமீபத்தில் வரி விதிப்பு மாற்றம் செய்யப்பட்ட வீடுகளுக்கு இது பொருந்தாது.

மேற்கண்ட தகவலை நகராட்சி (பொறுப்பு) ஆணையாளர் தனலட்சுமி தெரிவித்தார். #tamilnews
Tags:    

Similar News