செய்திகள்

முதுகுளத்தூரில் சீரமைப்பு என்ற பெயரில் 2 நாட்களாக தொடர் மின்வெட்டு- பொதுமக்கள் அவதி

Published On 2018-10-01 11:51 GMT   |   Update On 2018-10-01 11:51 GMT
முதுகுளத்தூரில் சீரமைப்பு என்ற பெயரில் தொடர்ந்து 2 நாட்களாக மின்வெட்டு அமல்படுத்தபட்டுள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
முதுகுளத்தூர்:

முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு கமுதி உபமின் நிலையத்திலிருந்து மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. மாதம் ஒருமுறை மின் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணியிலிருந்து இரவு 7 மணி வரை தொடர் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.

தற்போது ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தில் மின் வயர்கள், டிரான்ஸ்பர்மர் பராமரிப்பு என்ற பெயரில் நேற்றும், நேற்று முன்தினம் முதுகுளத்தூரில் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.

இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் அதிருப்தியடைந்துள்ளனர். அறிவிக்கப்படாத மின்வெட்டால், தெருக்கள் இருளில் மூழ்கியதால், இரவு நேரங்களில் வழிப்பறி, திருட்டு அச்சத்தில் பொதுமக்கள், வியாபாரிகள் அச்சமடைந்தனர்.
Tags:    

Similar News