செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவிகிதம் உயர்த்தி முதல்வர் உத்தரவு

Published On 2018-09-17 14:08 GMT   |   Update On 2018-09-17 14:08 GMT
தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 7 சதவிகிதத்தில் இருந்து 9 சதவிகிதமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalaniswami
சென்னை:

மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 9 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 18 லட்சம் அரசு ஊழியர்களும்,  ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் தமிழக அரசுக்கு 1157 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்.

ஓய்வூதியதாரர்களுக்கு 154 முதல் 2250 ரூபாய் வரையும், அரசு ஊழியர்களுக்கு 314 ரூபாய் முதல் 4500 ரூபாய் வரையும் கூடுதலாக ஊதியம் கிடைக்கும். இந்த அகவிலைப்படி உயர்வு ஜூன் 2018 முதல் ஆகஸ்ட் வரை நிலுவையாகவும், அதன் பிறகு சம்பளத்துடனும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News