செய்திகள்

பாசனத்துக்காக பாரூர் ஏரியில் 1-ந்தேதி தண்ணீர் திறப்பு - முதல்வர் பழனிசாமி உத்தரவு

Published On 2018-06-28 10:41 IST   |   Update On 2018-06-28 10:41:00 IST
விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்று பாசனத்துக்காக பாரூர் ஏரியில் இருந்து வருகிற 1-ந்தேதி முதல் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

அதை ஏற்று போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் போக சாகுபடிக்கு பாரூர் பெரிய ஏரியிலிருந்து 1.7.2018 முதல் 12.11.2018 வரை 135 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 2397.42 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Tags:    

Similar News