செய்திகள்

அய்யங்குட்டிபாளையத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி பலி

Published On 2018-05-21 10:13 GMT   |   Update On 2018-05-21 10:13 GMT
அய்யங்குட்டிபாளையத்தில் பஸ்சுக்கு காத்திருந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் பலியானார்.

புதுச்சேரி:

கண்டமங்கலம் அருகே வி.நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் அறுமுகம். இவரது மனைவி இளங்கலை (வயது60). இவர் நேற்று புதுவை கல்மேடுபேட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் மாலையில் ஊர் திரும்ப அய்யங்குட்டிபாளையத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இளங்கலை மீது மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட இளங்கலை படுகாயம் அடைந்தார். உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இளங்கலை பரிதாபமாக இறந்து போனார்.

இந்த விபத்து குறித்து அவரது மகன் பிரதாப் கொடுத்த புகாரின்பேரில் வடக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News