செய்திகள்
கொலை செய்யப்பட்ட மகாலிங்கம்

லாட்ஜ் ஊழியர் அடித்துக்கொலை- பெண்கள் உள்பட 6 பேர் கைது

Published On 2018-05-05 10:28 GMT   |   Update On 2018-05-05 10:28 GMT
காதல் திருமணம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் லாட்ஜ் ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையம்:

ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 40). இவருக்கும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த சடையம்பாளையம் காந்தி நகரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களது ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மகாலிங்கம் பவானியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வேலை பார்த்து வந்தார். காந்தி நகரில் உள்ள மாமியார் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கோபியில் உறவினர் வீட்டில் நடைபெற்ற காதல் திருமணம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. இதுசம்பந்தமாக கோபி போலீசில் புகார் செய்யப்பட்டு இருதரப்பினரையும் போலீசார் அழைத்து சமாதானம் செய்து வைத்தனர்.

பின்னர் இதுசம்பந்தமாக நேற்று முன்தினம் இரு தரப்பினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மகாலிங்கத்தின் மனைவி விஜயலட்சுமியை அவர்கள் தாக்க முயன்றனர்.

உடனே மகாலிங்கம் அவர்களை தடுத்தார். இதில் ஆத்திரம் அடைந்த உறவினர் மாதேஸ்வரன் கட்டையால் மகாலிங்கத்தை சரமாரியாக தாக்கினார். இதில் காயம் அடைந்த மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி விஜயலட்சுமி குமாரபாளையம் போலீசில் அளித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் கீழ்வாணியை சேர்ந்த மாதேஸ்வரன் (வயது 55), பழனிசாமி (45), குமாரபாளையம் காந்தி நகரைச் சேர்ந்த பூமணி (45), அலமேலு, ராஜேஸ்வரி, காயத்ரி ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News