செய்திகள்
ஈரோடு ரெயில் நிலையத்தில் நாளை ரெயில் மறியல் போராட்டம்: தா.பாண்டியன் பங்கேற்பு
ஈரோடு ரெயில் நிலையத்தில் நாளை ரெயில் மறியல் போராட்டம் நடக்கிறது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் பங்கேற்கிறார்.
ஈரோடு:
இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடக்கிறது.
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு கட்டும் தடுப்பணையை உடனே நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மையத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும். கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு உச்ச நீதிமன்ற மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடக்கிறது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன், மாக்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முத்துசாமி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு உள்பட பலர் இதில் கலந்து கொள்கிறார்கள்.