செய்திகள்

கெலமங்கலம் அருகே இளம்பெண் தற்கொலை

Published On 2017-02-12 17:21 GMT   |   Update On 2017-02-12 17:21 GMT
கெலமங்கலம் அருகே கணவர் குடித்து விட்டு வந்து ஆபாச வார்த்தையால் திட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள தொட்டபேளூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி முனிலட்சுமி(28). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் காவியா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் குமார், தினமும் குடித்துவிட்டு வந்து, ஆபாச வார்த்தையால் திட்டுவதுடன், அடித்தும் உள்ளார். இதனால் மனமுடைந்து முனிலட்சுமி நேற்ற வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த கெலமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர்ஆனந்தன் சம்பவ இடத்திற்கு சென்று முனிலட்சுமியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Similar News