செய்திகள்
ஏ.சி. கேரவனில் வந்த இலங்கை அமைச்சரின் காளைகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமானுக்கு சொந்தமான 5 காளைகள் பங்கேற்றன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமானுக்கு சொந்தமான 5 காளைகள் பங்கேற்றன. சிவகங்கையில் வளர்க்கப்பட்டு வரும் இந்த காளைகள் இன்று காலை ஏ.சி. கேரவன் மூலம் அலங்காநல்லூருக்கு கொண்டு வரப்பட்டன.
பின்னர் அவைகள் வாடிவாசல் மூலம் அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு இலங்கை அமைச்சர் தொண்டைமான் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.