செய்திகள்

ஆம்பூர் அருகே கூலி தொழிலாளி வீட்டில் நகை கொள்ளை

Published On 2017-01-17 10:27 GMT   |   Update On 2017-01-17 10:27 GMT
ஆம்பூர் அருகே கூலி தொழிலாளி வீட்டில் 4½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
ஆம்பூர்:

ஆம்பூர் அருகே உள்ள சின்னவரிகம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 45). கூலி தொழிலாளி.

இவரது வீட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 4½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இது குறித்து உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

Similar News