செய்திகள்

வளவனூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: கணவரிடம் போலீசார் விசாரணை

Published On 2017-01-17 10:16 GMT   |   Update On 2017-01-17 10:41 GMT
வளவனூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் கணவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வளவனூர்:

வளவனூர் அருகே உள்ள பஞ்சமாதேவி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி செல்வி (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

கணவன்-மனைவி 2 பேரும் வெளியூரில் தங்கி பாத்திர வியாபாரம் செய்து வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்காக 3 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தனர். இந்தநிலையில் நேற்று சுபாஷ் வீட்டைவிட்டு கதறி அழுதபடியே வெளியே வந்தார். அங்கு நின்ற பொதுமக்களிடம் என் மனைவி செல்வி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார். இதைத் தொடர்ந்து வளவனூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். செல்வியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திடீரென்று செல்வி தூக்குபோட்டு இறந்துவிட்டார் என்று சுபாஷ் கூறுவது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே சுபாசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News