செய்திகள்

திருமணமான 5 வருடத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2017-01-16 10:46 GMT   |   Update On 2017-01-16 10:46 GMT
கோவை செட்டிப்பாளையம் அருகே திருமணமான 5 வருடத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை:

கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள பெரிய குழியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி கலைவாணி (வயது 27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த கலைவாணி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய தங்கவேல் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இந்த தகவல் கிடைத்ததும் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கலைவாணியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமான 5 வருடத்தில் கலைவாணி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News