செய்திகள்

காட்டாங்கொளத்தூரில் மருத்துவ மாணவருக்கு அரிவாள் வெட்டு

Published On 2016-11-27 16:30 IST   |   Update On 2016-11-27 16:30:00 IST
காட்டாங்கொளத்தூரில் கல்லூரி முன்பு மருத்துவ மாணவருக்கு சரமாரி அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள‌து.


நெல்லை களக்காடு அடுத்த மாவடியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று ராஜேஷ் கல்லூரி முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு கார், மோட்டார் சைக்கிளில் 7 பேர் வந்தனர். அவர்கள் அரிவாள், கத்தி, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களை வைத்து இருந்தனர்.

அக்கும்பல் மாணவர் ராஜேஷை சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டியது. இதனால் அவர் அலறி துடித்தபடிஓடினார். ஆனால் அக்கும்பல் விரட்டி சென்று அவரை இரும்பு கம்பியால் தாக்கினார்கள்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள், மாணவர்கள் ஓடிவந்தனர். உடனே 7 பேர் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

படுகாயம் அடைந்த ராஜேஷை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்ரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் ராஜேசுக்கும் சக மாணவர் ஒருவருக்கும் ஏற்பட்ட முன் விரோதத்தில் இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ராஜேசின் பெற்றோர், உறவினர்கள் கூறும் போது ராஜேஷ் படுகாயம் அடைந்துள்ளார். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News