செய்திகள்

திண்டிவனம் அருகே தொழிலாளியின் மனைவி கடத்தல்: வாலிபர் மீது போலீசில் புகார்

Published On 2016-11-18 17:03 IST   |   Update On 2016-11-18 17:03:00 IST
திண்டிவனம் அருகே தொழிலாளி மனைவியை வாலிபர் கடத்தி சென்று உள்ளார்.இது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே உள்ள பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கப்பன்(வயது 29). தொழிலாளி. இவரது மனைவி குமாரி(24). இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

தங்கப்பன் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது குமாரியை வீட்டில் காணவில்லை. அவரை பல இடங்களில் தங்கப்பன் தேடினார். ஆனால் அவர் எங்கும் இல்லை.

இதையடுத்து ரோசனை போலீசில் தங்கப்பன் புகார் செய்தார். இதில் தன் மனைவி குமாரியை அதே பகுதியை சேர்ந்த மாரி(23) கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

இதையொட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாரி மற்றும் குமாரியை தேடி வருகின்றனர்.

Similar News