செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் இலங்கை பெண் மரணம்

Published On 2016-11-17 14:22 IST   |   Update On 2016-11-17 14:22:00 IST
சென்னை விமான நிலையத்தில் மாரடைப்பால் இலங்கை பெண் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் இன்று காலை இலங்கை புறப்பட்ட விமானம் தயாராக இருந்தது. அதில் செல்லும் பயணிகள் ஓய்வு அறையில் இருந்த போது இலங்கையை சேர்ந்த விஜயகோடி அரசாட்சி (வயது 70) திடீரென மயங்கினார்.

விமான நிலைய மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் மாரடைப்பால் இறந்திருப்பது தெரிந்தது. இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News