செய்திகள்

தாம்பரத்தில் மொபட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் கொள்ளை

Published On 2016-10-14 14:25 IST   |   Update On 2016-10-14 14:26:00 IST
தாம்பரத்தில் மொபட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தாம்பரம்:

தாம்பரம் அடுத்த பீர்க்கங்கரணை தூரத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரண்யா. இவர் தாம்பரத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று மாலை நிறுவனத்தின் பணம் ரூ.50 ஆயிரத்தை வசூலித்து தனது மொபட்டில் சீட் அடியில் வைத்தார். பின்னர் தாம்பரத்தில் உள்ள பள்ளிக்கு அண்ணன் மகனை அழைத்து வர சென்ற அவர் பள்ளி முன்பு மொபட்டை நிறுத்தினார். திரும்பி வந்த போது மொபட் சீட் விலகி இருந்தது. மர்ம நபர் ரூ.50 ஆயிரம் 4 செல்போன்களை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பீர்க்கங்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

இதேபோல் திருநீர்மலையை சேர்ந்தவர் ராஜேந்திரன் டெய்லர். இவர் நேற்று மதியம் குரோம் பேட்டையில் உள்ள வங்கியில் ரூ.45 ஆயிரம் எடுத்தார்.

பணத்தை மொபட்டின் சீட் அடியில் வைத்து வீட்டுக்கு புறப்பட்டார். வழியில் வண்டியை நிறுத்தி டீக் கடையில் டீ குடித்துவிட்டு சென்றார்.

வீட்டுக்கு வந்து பார்த்த போது மொபட்டில் இருந்து பணம் மாயமாகி இருந்தது.

ராஜேந்திரன் வங்கியில் இருந்து பணம் எடுப்பதை நோட்டமிட்டு பின் தொடர்ந்து வந்து திருடி உள்ளனர். இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

Similar News