செய்திகள்

நந்தம்பாக்கத்தில் ராணுவ வீரர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2016-10-14 13:55 IST   |   Update On 2016-10-14 13:55:00 IST
நந்தம்பாக்கத்தில் ராணுவ வீரர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்:

நந்தம்பாக்கம் ராணுவ குடியிருப்பில் வசித்து வருபவர் சுப்பிரமணியன் (வயது 77). ராணுவ அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜோலா முகி (72) இவர்களின் மகன்கள் வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். எனவே, சுப்பிரமணியனும், ஜோலா முகியும் தனியாக வசித்து வந்தனர்.

நேற்று இரவு சுப்பிரமணியனும் அவரது மனைவியும் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பீரோ இருந்த அறைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

காலையில் சுப்பிரமணியன் எழுந்து பார்த்த போது தான் கொள்ளை நடந்திருப்பது தெரிய வந்தது. சுப்பிரமணியனுக்கும் அவரது மனைவிக்கும் வயதாகி விட்டதால் சரிவர காது கேட்க வில்லை. இதை பயன்படுத்தி கொள்ளையர்கள் நகை- பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சுப்பிரமணியன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Similar News