பண்ருட்டியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது
பண்ருட்டி:
பண்ருட்டியை அடுத்த தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். அரசு பஸ் கண்டக்டர். இவரது மகள் ஹரினி(வயது 13) பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே பள்ளியில் ராஜீவ்காந்தி என்பவர் ஆசிரியராக உள்ளார். இவர் ஹரினியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று விட்டார்.
இதுகுறித்து மாணவியின் தந்தை ஜெய்சங்கர் அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை கடத்தி சென்ற ஆசிரியர் ராஜீவ் காந்தியை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாணவியின் தாயார் வனிதா ராஜீவ்காந்தியின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த ராஜீவ்காந்தியின் தம்பி சஞ்சய் காந்தியிடம் எனது மகளை உன் அண்ணன் எங்கு கடத்தி சென்றார் எனக் கேட்டார்.
அதற்கு சஞ்சய் காந்தி தகாத வார்த்தைகளால் பேசியதோடு வனிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வனிதா அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குபதிவு செய்து சஞ்சய் காந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.