செய்திகள்

பண்ருட்டி அருகே 5 ஏக்கர் கரும்பு தோட்டம் எரிந்து சாம்பல்

Published On 2016-08-08 12:08 IST   |   Update On 2016-08-08 12:08:00 IST
மின்கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில் பண்ருட்டி அருகே 5 ஏக்கர் கரும்பு தோட்டம் எரிந்து சாம்பல் ஆனது.

பண்ருட்டி:

பண்ருட்டி அருகே உள்ள நல்லூர் பாளையத்தைச் சேர்ந்தவர் சிவசந் திரன்(வயது 42). விவசாயி.

இவருக்கு அதே பகுதியில் 2 ஏக்கர் கரும்பு தோட்டம் இருந்தது. நேற்று மாலை அந்த பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால் கரும்பு தோட்டத்துக்கு மேலே சென்ற மின்கம்பிகள் உரசியதால் தீப்பொறிகள் பறந்தது.

இந்த தீப்பொறிகள் விழுந்து கரும்பு தோட்டத்தில் தீ பற்றியது. சிவசந்திரனின் கரும்பு தோட்டத்துக்கு அருகில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் கரும்பு தோட்டம் இருந்தது. அந்த தோட்டத்திற்கும் தீ பரவியது. இதில் கரும்புகள் எரிந்து சேதமடைந்தது.

இதுகுறித்து பண்ருட்டி தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் செந்தில் குமார் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கரும்புகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினர்.

Similar News