செய்திகள்

பெருந்துறை அருகே கிணற்றில் மீன் பிடித்த மாணவன் தவறி விழுந்து பலி

Published On 2016-07-09 16:27 IST   |   Update On 2016-07-09 16:27:00 IST
பெருந்துறை அருகே கிணற்றில் மீன் பிடித்த மாணவன் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்துறை:

பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டி செல்லி பாளையம், பாலன் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் ரகுராம் (12). இவன் கருமாண்டிசெல்லி பாளையம் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்

நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை என்பதால் ரகுராம் தனது பாட்டி வீட்டுக்கு சென்றான் அங்கு சாப்பிட்டுவிட்டு அருகில் உள்ள கொட்டப்பரத்துக்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள கிணற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளான்.

அப்போது கிணற்றில் தவறி விழுந்த ரகுராம் நீருக்குள் மூழ்கி விட்டான்.

பொதுமக்கள் உடனடியாக கிணற்றுக்குள் இறங்கி தேடி பார்த்தனர். ரகுராம் கிடைக்காமல் போகவே இருட்டி விட்டதால் அங்கிருந்து சென்று விட்டனர்.

மீண்டும் காலையில் சென்று பார்த்த போது ரகுராமின் உடல் நீரில் மிதந்தபடி இருந்தது. அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி ரகுராமின் சடலத்தை மீட்டனர்.

மாணவன் ரகுராமின் உடலைபார்த்து அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது உருக்கமாக இருந்தது,

பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்.

Similar News