செய்திகள்

கீரனூர் அருகே செல்போனில் பேசியதை கண்டித்ததால் இளம்பெண் தீ குளித்து தற்கொலை

Published On 2016-06-02 12:29 IST   |   Update On 2016-06-02 12:29:00 IST
கீரனூர் அருகே செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் இளம் பெண் தீ குளித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீரனூர்:

அண்டக்குளம் அருகேயுள்ள வைத்திக்கோவிலை சேர்ந்தவர் சண்முகம், இவரது மகள் ரேவதி (வயது 21), புதுகை அரசு கல்லூரியல் பி.ஏ படித்துள்ளார்.

இந்நிலையில் ரேவதி வீட்டில் எப்போழுதும் செல்போனில் அடிக்கடி தனியாக பேசிகொண்டிருப்பதை இவரது தந்தை சண்முகம், ரேவதியை கண்டித்திருக்கிறார். இதனால் மனவேதனை அடைந்த ரேவதி புதன் கிழமை மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துள்ளார். தீ உடல் மீது பரவலாக பிடித்து எரிந்தது இதன் வேட்கை தாங்காமல் அலறி துடித்துள்ளார். இந்த அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது உடல் முழுவதும் எரிந்து சம்பவ இடத்திலேயே பிரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

சம்பவம் குறித்து உடையார்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் உடலை மீட்டு புதுகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பின்பு சம்பவம் குறித்து வேறு ஏதும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News