செய்திகள்
சீர்காழி அருகே ரூ.3 கோடி சீட்டு பணம் மோசடி: நிதி நிறுவன உரிமையாளர் மீது புகார்
சீர்காழி அருகே ரூ.3 கோடி சீட்டு பணம் மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமைலாடி, சீயாளம் யாதவ தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் இளவரசு. விவசாயி. இவர் நேற்று நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–
சீர்காழி தாலுகா ஆணைக்காரன் சத்திரம், மேலவல்லம், காலனியை சேர்ந்த ரத்தினம் மகன் கலைச்செல்வன் என்பவர் கொள்ளிடம் ரெயில்வே ரோடு பகுதியில் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை சீட்டு நடத்தி வந்தார். நானும் இந்த ஏல சீட்டுகளில் பலமுறை சேர்ந்து ஏலம் எடுத்துள்ளேன். அந்த நம்பிக்கையில் கடைசியாக ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் என 2 சீட்டுகளில் சேர்ந்தேன். இந்த 2 சீட்டுகளும் இன்னும் ஏலம் எடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 35 நாட்களுக்கு முன்பு கலைச்செல்வனிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் தனக்கு சீட்டில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும், அதனால் ஏல சீட்டில் சேர்ந்தவர்களுக்கு பணத்தை திரும்ப தரமுடியாது என்றும், தனது வாழ்க்கையை முடித்து கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை கண்டதும் எனக்கு பெரும் அதிர்ச்சியும், மனஉளைச்சலும் ஏற்பட்டது.
கடிதத்தை கண்டவுடன் கலைச்செல்வனை தேடி சென்ற போது அவரது வீடு மற்றும் அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. பின்னர் அருகில் விசாரித்தபோது கலைச்செல்வன் ஏலச்சீட்டு நடத்தி 100–க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.3 கோடிக்குமேல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.
கலைச்செல்வன், அவரது மாமனார் மற்றும் மனைவி பெயரில் சிதம்பரம் பைபாஸ் சாலையில் 20 பிளாட்டுகள் வாங்கி உள்ளார். இதன் தற்கால மதிப்பு சுமார் ரூ.1 கோடியாகும். மேலும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கூட்டுறவு வங்கியில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருப்பியுள்ளார். கலைச்செல்வன் ஏமாற்றும் நோக்கத்தோடு ஏலச்சீட்டு நடத்தி என்னிடமும், மற்றவர்களிடமும் பணத்தை வசூல் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவருடைய மாமனாரிடம் கேட்டபோது, கலைச்செல்வன் எங்கு இருக்கிறார் என்று தெரியாது என்று கூறுகிறார். எனவே, ஏலச்சீட்டு நடத்தி என்னையும், மற்றவர்களையும் ஏமாற்றி மோசடி செய்த கலைச்செல்வனையும், அவருக்கு உதவியாக உள்ள அவரது மாமனார் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமைலாடி, சீயாளம் யாதவ தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் இளவரசு. விவசாயி. இவர் நேற்று நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–
சீர்காழி தாலுகா ஆணைக்காரன் சத்திரம், மேலவல்லம், காலனியை சேர்ந்த ரத்தினம் மகன் கலைச்செல்வன் என்பவர் கொள்ளிடம் ரெயில்வே ரோடு பகுதியில் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை சீட்டு நடத்தி வந்தார். நானும் இந்த ஏல சீட்டுகளில் பலமுறை சேர்ந்து ஏலம் எடுத்துள்ளேன். அந்த நம்பிக்கையில் கடைசியாக ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் என 2 சீட்டுகளில் சேர்ந்தேன். இந்த 2 சீட்டுகளும் இன்னும் ஏலம் எடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 35 நாட்களுக்கு முன்பு கலைச்செல்வனிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் தனக்கு சீட்டில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும், அதனால் ஏல சீட்டில் சேர்ந்தவர்களுக்கு பணத்தை திரும்ப தரமுடியாது என்றும், தனது வாழ்க்கையை முடித்து கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை கண்டதும் எனக்கு பெரும் அதிர்ச்சியும், மனஉளைச்சலும் ஏற்பட்டது.
கடிதத்தை கண்டவுடன் கலைச்செல்வனை தேடி சென்ற போது அவரது வீடு மற்றும் அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. பின்னர் அருகில் விசாரித்தபோது கலைச்செல்வன் ஏலச்சீட்டு நடத்தி 100–க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.3 கோடிக்குமேல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.
கலைச்செல்வன், அவரது மாமனார் மற்றும் மனைவி பெயரில் சிதம்பரம் பைபாஸ் சாலையில் 20 பிளாட்டுகள் வாங்கி உள்ளார். இதன் தற்கால மதிப்பு சுமார் ரூ.1 கோடியாகும். மேலும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கூட்டுறவு வங்கியில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருப்பியுள்ளார். கலைச்செல்வன் ஏமாற்றும் நோக்கத்தோடு ஏலச்சீட்டு நடத்தி என்னிடமும், மற்றவர்களிடமும் பணத்தை வசூல் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவருடைய மாமனாரிடம் கேட்டபோது, கலைச்செல்வன் எங்கு இருக்கிறார் என்று தெரியாது என்று கூறுகிறார். எனவே, ஏலச்சீட்டு நடத்தி என்னையும், மற்றவர்களையும் ஏமாற்றி மோசடி செய்த கலைச்செல்வனையும், அவருக்கு உதவியாக உள்ள அவரது மாமனார் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.