செய்திகள்
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் இன்று சிறைப்பிடிப்பு
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
அறந்தாங்கி:
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த திங் கட்கிழமைதான் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் தடை காலத்திற்கு பிறகு கடலுக்கு சென்ற முதல்நாளே ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை அத்துமீறி சிறைபிடித்துச் சென்றது.
இதுதொடர்பாக ராமேசுவரத்தில் நேற்று நடந்த அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டத்தில் சிறைப் பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி வருகிற 24-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடைகாலத்திற்கு பிறகு 2-வது முறையாக கடலுக்கு சென்ற கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். அது பற்றிய விபரம் வருமாறு:-
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 293 விசைப்படகுகளிலும், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 211 விசைப்படகுகளிலும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்களில் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த தியாகு (வயது 42) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற தியாகு, மணி (27), பாலா (27), சந்திரன் (47) ஆகியோர் நெடுந்தீவு அருகே இந்திய கடற்பகுதியில் இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு சென்றிருப்பதால் அதிகப்படியான மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வலைகளை விரித்து காத்திருந்தனர்.
அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள் மின்னல் வேகத்தில் வந்தன. இந்திய எல்லைக்குள் அத்துமீறி வந்த இலங்கை கடற்படையினர் தியாகுவின் விசைப்படகை சுற்றி வளைத்து, அந்த படகையும், அதில் இருந்த 4 மீனவர்களையும் சிறை பிடித்தனர். பின்னர் 4 மீனவர்களையும் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் பிற்பகலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அப்போதுதான் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்று தெரிய வரும்.
இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே 45 நாட்கள் வேலையிழந்து சிரமப்பட்டு மீண்டும் தொழிலுக்கு சென்ற மீனவர்களை அச்சப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
தொடர்ந்து தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதால், மீனவர்கள் தொழிலுக்கு செல்லவே அச்சப்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே மத்திய-மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த திங் கட்கிழமைதான் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் தடை காலத்திற்கு பிறகு கடலுக்கு சென்ற முதல்நாளே ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை அத்துமீறி சிறைபிடித்துச் சென்றது.
இதுதொடர்பாக ராமேசுவரத்தில் நேற்று நடந்த அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டத்தில் சிறைப் பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி வருகிற 24-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடைகாலத்திற்கு பிறகு 2-வது முறையாக கடலுக்கு சென்ற கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். அது பற்றிய விபரம் வருமாறு:-
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 293 விசைப்படகுகளிலும், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 211 விசைப்படகுகளிலும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்களில் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த தியாகு (வயது 42) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற தியாகு, மணி (27), பாலா (27), சந்திரன் (47) ஆகியோர் நெடுந்தீவு அருகே இந்திய கடற்பகுதியில் இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு சென்றிருப்பதால் அதிகப்படியான மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வலைகளை விரித்து காத்திருந்தனர்.
அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள் மின்னல் வேகத்தில் வந்தன. இந்திய எல்லைக்குள் அத்துமீறி வந்த இலங்கை கடற்படையினர் தியாகுவின் விசைப்படகை சுற்றி வளைத்து, அந்த படகையும், அதில் இருந்த 4 மீனவர்களையும் சிறை பிடித்தனர். பின்னர் 4 மீனவர்களையும் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் பிற்பகலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அப்போதுதான் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்று தெரிய வரும்.
இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே 45 நாட்கள் வேலையிழந்து சிரமப்பட்டு மீண்டும் தொழிலுக்கு சென்ற மீனவர்களை அச்சப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
தொடர்ந்து தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதால், மீனவர்கள் தொழிலுக்கு செல்லவே அச்சப்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே மத்திய-மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.