செய்திகள்

வேதாரண்யம் அருகே சொத்து தகராறில் மகனை தாக்கிய தந்தை

Published On 2016-05-31 17:50 IST   |   Update On 2016-05-31 17:50:00 IST
வேதாரண்யம் அருகே சொத்து தகராறில் மகனை தாக்கிய தந்தையை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த செம்போடை மேற்கு பகுதியை சேர்ந்தவர் புஷ்பநாதன். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் சுதாகரன் (வயது 30), இளைய மகன் ராஜ் (25). இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் அண்ணன், தம்பி இருவரும் புஷ்பநாதனிடம் சொத்தை பிரித்துக்கொடுக்கும்படி கூறியுள்ளனர்.

இதையடுத்து அவர் சொத்தை 2 பாகமாக பிரித்து கொடுத்துள்ளார். அதில் இளையமகன் ராஜூக்கு ஒரு சவுக்குதோப்பை அதிகமாக எழுதிவைத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுதாகரன் நேற்று வீட்டில் இருந்த புஷ்பநாதனிடம் சென்று தகராறு செய்துள்ளார். அதனை கண்ட ராஜ் அண்ணனை தட்டி கேட்டுள்ளார்.அப்போது சுதாகரன் தனது தம்பி ராஜை தாக்கியுள்ளார். இளைய மகன் அடிவாங்குவதை பார்த்து ஆத்திரம் அடைந்த புஷ்பநாதன் கட்டையை எடுத்து சுதாகரன் தலையில் அடித்துள்ளார். இதில் மண்டை உடைந்து மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைகாக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News