செய்திகள்
புதுக்கோட்டை அருகே தேர்தல் தகராறில் 80 பேர் மீது வழக்குப்பதிவு
புதுக்கோட்டை அருகே தேர்தல் தகராறில் 80 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருப்பட்டி பட்டி ஊராட்சித் தலைவர் சொக்கலிங்கம். அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளரான இவர் அக்கட்சியில், இருந்து சில மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்டார்.
இதையடுத்து நடைபெற்ற 2016 சட்டப்பேரவை தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் சொக்கலிங்கம் சுயேச்சையாக போட்டியிட்டு 22ஆயிரத்து 973 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார். இவர் போட்டியிட்டதனால் தான் அ.தி.மு.க.வெற்றி வாய்ப்பை இழந்ததாக கூறி புதுக்கோட்டையை சேர்ந்த ராமசுப்பிரமணியன் தரப்புக்கும், சொக்கலிங்கம் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்ப்பட்டது. இது குறித்து மழையூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து ராமசுப்பிரமணியன் தரப்பில் 40 பேர் மீதும், சொக்கலிங்கம் தரப்பில் 40 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.