செய்திகள்

புதுக்கோட்டை அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பம் வரவேற்பு

Published On 2016-05-27 15:05 IST   |   Update On 2016-05-27 15:05:00 IST
புதுக்கோட்டை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். அரசு இசைப்பள்ளியில் நிகழ்வாண்டுக்கான இருபாலர் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

அதில் குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகிய வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க 7 ஆம் வகுப்பு தேர்ச்சியும், நாதசுரம், தவில், தேவாரம், ஆகிய வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க எழுதப் படிக்கத் தெரிந்திருக்கவும் வேண்டும். 12 வயது முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்காலம் 3 ஆண்டுகள். பயிற்சி நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை. பயிற்சி கட்டணம் ரூ.152.

அரசுச் சான்றிதழ் படிப்பான இப்பயிற்சியில் அரசுத்துறையில் வேலைவாய்ப்புகளும், மற்றும் இலவசப் பேருந்நு சலுகை, தங்கும் வசதி மற்றும் கல்வி உதவித்தொகை அரசு விதிகளுக்குட்பட்டு வழங்கப்படும். மேலும், மாணவர்களுக்கு சீருடை, காலணி, மிதிவண்டி, அரசுவிதிகளின்படி வழங்கப்படும். மாணவர்கள் அனைவருக்கும் ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூ.400 வழங்கப்படும்.

எனவே, ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் மாவட்ட அரசு இசைப்பள்ளி, கதவு எண்:1883, திலகர்திடல், புதுக்கோட்டை என்ற முகவரியில் பள்ளித் தலைமையாசிரியரை நேரில் அணுகவும். மேலும் விவரங்களுக்கு 04322–225575, 9442573345 என்ற தொலைபேசி எண்ணினை தொடர்பு கொள்ளவும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்கள்.

Similar News