செய்திகள்
காஞ்சீபுரத்தில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
காஞ்சீபுரத்தில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மூங்கில் மண்டபம் மற்றும் தாலுகா அலுவலகம் பகுதியில் பள்ளிகள், காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், தொலைபேசி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. அப்பகுதியில் போக்கு வரத்து நெரிசலில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சாலையை கடக்க பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
எனவே காஞ்சீபுரம் காமராஜர் சாலையில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.