வழிபாடு

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் தை அமாவாசை திருவிழா கொடியேற்றம்

Published On 2023-01-13 10:39 IST   |   Update On 2023-01-13 10:39:00 IST
  • தை அமாவாசை திருவிழா வருகிற 21-ந்தேதி நடக்கிறது.
  • 23-ந்தேதி ஆலிலை சயன மங்கள தரிசனம் நடக்கிறது.

பிரசித்தி பெற்ற ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியினை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் நடத்தி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

முக்கிய நிகழ்ச்சியான தை அமாவாசை திருவிழா வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று பகல் 1 மணிக்கு சுவாமி உருகு பலகை தரிசனம், அபிஷேகம், மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக்காட்சி அளித்தல், இரவு 10 மணிக்கு கற்பகபொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது.

22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், தொடர்ந்து பச்சை சாத்தி சப்பரம் உலா வருதல், இரவு 10 மணிக்கு கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி நடைபெறுகிறது.

23-ந் தேதி (திங்கட்கிழமை) காலை தாமிரபரணி ஆற்றில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் சுவாமி நீராடுதல், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவில் சுவாமி ஆலிலை சயன மங்கள தரிசனம் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.

Tags:    

Similar News