வழிபாடு

குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் சப்பர பவனி

Published On 2022-10-13 04:47 GMT   |   Update On 2022-10-13 04:47 GMT
  • முத்தாரம்மன் சப்பரத்தில் எழுந்தருளி, கோவில் வளாகத்தை சுற்றி வந்தார்.
  • விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் புரட்டாசி மாத கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு காலையில் நடைதிறக்கப்பட்டு, மதியம் உச்சிகால பூஜை, மாலையில் சாயரட்சை பூஜை, இரவில் ராக்கால பூஜை நடந்தது.

தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் சப்பரத்தில் எழுந்தருளி, கோவில் வளாகத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News